மதுரை மாவட்டம் ஆனையூர் எஸ்விபி நகரைச் சேர்ந்தவர் உதயகுமார் (28). இவர் மீது ஏற்கனவே மூன்று கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் புதூர் ஆலங்குளம் தனியார் எண்ணெய் மில் அருகில் உதயகுமார் சென்றபோது முன்விரோதம் காரணமாக அடையாளம் தெரியாத நபர்கள் ஓட ஓட அவரை விரட்டி வெட்டிக்கொலை செய்தனர்.
இதில், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உதயகுமார் உயிரிழந்தார். அவரைக் கொலைசெய்த அடையாளம் தெரியாத நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடல்புதூர் காவல் துறையினர், இறந்தவரின் உடலைக் கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர்.