தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாடு மீது மோதிய இருசக்கர வாகனம்: இளைஞர் உயிரிழப்பு! - இருசக்கர வாகன விபத்து

மதுரை: திருமங்கலம் அருகே சாலையை கடந்த மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தில் உயிரிழந்த இளைஞர்
விபத்தில் உயிரிழந்த இளைஞர்

By

Published : Nov 28, 2020, 11:29 AM IST

மதுரை மாவட்டம் பைக்கரா பகுதியைச் சேர்ந்தவர் அஷ்ரப் (20). இவர் தன்னுடைய நண்பர் திருப்பரங்குன்றதைச் சேர்ந்த சுந்தரேஸ்வரன் (19) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் திருமங்கலம் அருகேவுள்ள சிவரக்கோட்டை பகுதியில் நண்பர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று வீடு திரும்பிகொண்டிருந்தனர்.

திருமங்கலம் அருகே கப்பலூர் காலனி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஒரு மாடு சாலையை கடந்தது. அப்போது நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் மாட்டின் மீது மோதியது. இதில், தூக்கிவீசப்பட்ட இளைஞர்கள் இருவரும் படுகாயங்களுடன் சாலையில் கிடந்தனர்.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர்கள் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட அஷ்ரப் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்த இளைஞர்

மேலும், படுகாயமடைந்த சுந்தரேஸ்வரனுக்கு திருமங்கலம் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த திருமங்கலம் காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து: 3 இளைஞர்கள் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details