தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Madurai Alanganallur Jallikattu : உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு! என்னென்ன சிறப்புகள் இருக்கு?

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்க உள்ளது. விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைக்க உள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 17, 2024, 6:25 AM IST

Alanganallur Jallikattu
Alanganallur Jallikattu

மதுரை :உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை வீரர்கள் உறுதி மொழியுடன் துவங்க உள்ளது. தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து போட்டிகளை துவக்கி வைக்க உள்ளார்.

தைத்திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுகள் முறையை ஜனவரி 15, 16 ஆம் தேதிகளில் நடைபெற்று முடிந்து உள்ள நிலையில், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணி அளவில் உறுதிமொழி உடன் தொடங்க உள்ளது.

மாவட்ட ஆட்சியர் சங்கீதா உறுதிமொழி வாசிக்க வீரர்கள் தொடர்ந்து உறுதி எடுத்துக் கொள்ள உள்ளனர். தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைக்க உள்ளார். வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் விழாவில் கலந்து கொள்கின்றனர்.

சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகளும்,, 700க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கின்றனர். போட்டியில் மாலை வரை 10 சுற்றுகள் ஆக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு சுற்றிலும் 50 வீரர்கள் களமிறங்க உள்ளனர். அதில் அதிக காளைகளைப் பிடிக்கும் வீரர் அடுத்தடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார்.

போட்டிகளில் வெற்றி பெறும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் தங்க நாணயம், சைக்கிள், பீரோ, கட்டில், மெத்தை, பித்தளை பாத்திரங்கள், அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன. அதிக காளைகளை பிடிக்கும் மாடு பிடி வீரர்களுக்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரும், ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக்கும் பரிசாக வழங்கப்படுகிறது.

களத்தில் சிறப்பாக விளையாடும் காளையின் உரிமையாளருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சார்பாக ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரும் அதே போன்று பைக்கும் பரிசாக வழங்கப்படுகிறது. காயம் படும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்காக சுகாதாரத் துறை மற்றும் கால்நடை துறை சார்பாக சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. காயம்படும் வீரர்களை மற்றும் காளைகளை மீட்க இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தன்னார்வலர்கள் இதற்காக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அலங்காநல்லூர் முழுவதும் 2000க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 1,200 காளைகள், 800 மாடுபிடி வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டு உள்ளதாகவும், முன்பதிவு செய்தவர்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் மதுரை ஆட்சியர் சங்கீதா தகவல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க :மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு: 3வது முறையாக கார் வென்ற மாடுபிடி வீரர் பிரபாகரன்..

ABOUT THE AUTHOR

...view details