தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு அருங்காட்சியகம் சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாட்டங்கள்: மாணவ மாணவியர் பங்கேற்பு - womens day celebration at madurai govt museum

மதுரை அரசு அருங்காட்சியகம் சார்பாக உலக மகளிர் தின விழா பேச்சு போட்டி இன்று நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர் பங்கேற்றனர்.

மகளிர் தின விழா கொண்டாட்டங்கள்
மகளிர் தின விழா கொண்டாட்டங்கள்

By

Published : Mar 10, 2020, 3:24 PM IST

உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகம் மதுரை மாவட்ட கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி நடத்தியது. இதில் 40க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றனர்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட உதவி ஆட்சியர் ஜோதி சர்மா இஆப., “பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல் சமூகத்திற்காக பங்களிப்பு செய்ய முன்வர வேண்டும். பெண்கள் ஒவ்வொருவரின் முன்வந்த செயல்பாடுதான் இந்த சமூகத்தின் மேன்மையை உறுதி செய்யும். அந்த அடிப்படையில் உலக மகளிர் தினத்தை நாம் கொண்டாடி மகிழ வேண்டும்” என்றார்.

மகளிர் தின விழா கொண்டாட்டங்கள்

மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் கவிதா, லதா மாதவன் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முருகன், அல்ட்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் ராஜா ஆகியோர் பேச்சுப் போட்டி நடுவர்களாக பங்கேற்றனர்.

அருங்காட்சியக காப்பாட்சியர் மருது பாண்டியன் கூறுகையில், “40க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவியர் இந்த போட்டியில் பங்கெடுத்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழும் முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு கேடயமும் சான்றிதழும் பரிசாக வழங்கப்படும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details