அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் டிடிவி தினகரன் பரப்புரை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, மதுரை, மத்தியத் தொகுதி எஸ்டிபிஐ கட்சி சார்பில் போட்டியிடும் சிக்கந்தர் பாஷா, மதுரை மேற்குத் தொகுதியில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாலசந்திரன் ஆகியோரை ஆதரித்து நேற்று (மார்ச்.29) பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் டிடிவி தினகரன் வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், ”இன்றைக்கு தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் மக்கள் விரும்பாத துரோக ஆட்சியை நீங்கள் முடிவுக்கு கொண்டு வரவும், அதே போலவே தீயசக்தி கூட்டம் மீண்டும் வரவிடாமல் தடுக்கவும், வெற்றிச் சின்னம் முரசு, மதுரை மேற்கு மற்றும் மதுரை மத்திய தொகுதியில் குக்கர் சின்னங்களில் வாக்களித்து அமோக ஆதரவைத் தர வேண்டும்.