தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை! - தூக்கிட்டு தற்கொலை

மதுரையில் ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுதப்படை காவலர் மதுரையில் தூக்கிட்டு தற்கொலை!
ஆயுதப்படை காவலர் மதுரையில் தூக்கிட்டு தற்கொலை!

By

Published : Nov 13, 2021, 10:04 AM IST

மதுரை: விருதுநகர் மாவட்ட ஆயுதப்படையின் நான்காவது பட்டாலியனில் காவலராக பணியாற்றி வருபவர் கார்த்திக். தற்போது சென்னை காவலர்களுக்கான விளையாட்டு அணியில் உள்ளார். இவரது மனைவி நிஷா. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், விடுமுறைக்காக மதுரை ஆரப்பாளையம் அருகே கண்மாய்க்கரை தெருவில் உள்ள தனது வீட்டிற்கு வந்திருந்த கார்த்திக், வீட்டில் இருந்தபோது சாப்பிட வரவில்லை என்று அவரது தம்பி பிரவீண், அழைக்க சென்றுள்ளார். அப்போது கார்த்திக் தன்னுடைய படுக்கையறையில் தூக்கில் தொங்கியுள்ளார்.

மதுரையில் தற்கொலை செய்துகொண்ட ஆயுதப்படை காவலர் கார்த்திக்

நீண்ட நாட்களாகவே கார்த்திக் மற்றும் அவரது மனைவி நிஷா இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கரிமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல

இதையும் படிங்க: மழையின் போது மட்டுமல்ல, மக்களுக்கு தொடர்ந்து உதவிகள் செய்ய வேண்டும்- கமல்ஹாசன்

ABOUT THE AUTHOR

...view details