மதுரை: விருதுநகர் மாவட்ட ஆயுதப்படையின் நான்காவது பட்டாலியனில் காவலராக பணியாற்றி வருபவர் கார்த்திக். தற்போது சென்னை காவலர்களுக்கான விளையாட்டு அணியில் உள்ளார். இவரது மனைவி நிஷா. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், விடுமுறைக்காக மதுரை ஆரப்பாளையம் அருகே கண்மாய்க்கரை தெருவில் உள்ள தனது வீட்டிற்கு வந்திருந்த கார்த்திக், வீட்டில் இருந்தபோது சாப்பிட வரவில்லை என்று அவரது தம்பி பிரவீண், அழைக்க சென்றுள்ளார். அப்போது கார்த்திக் தன்னுடைய படுக்கையறையில் தூக்கில் தொங்கியுள்ளார்.