மதுரை: மதுரை ஆதீனம் 292ஆவது குருமகா சன்னிதானம் அருணகிரிநாதர் நேற்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது (77). கடந்த 9ஆம் தேதி இரவு ஆதீனம் அருணகிரிநாதர், வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டார்.
பின்னர் அவர் உடனடியாக மதுரை கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் போனது.
மறைவு செய்தி அறிந்து துயரம்
இந்நிலையில் மதுரை ஆதினம் அருணகிரிநாதர் மறைவுக்கு, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல். முருகன் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட மதுரை ஆதீனத்தின் மடாதிபதியாக 40 ஆண்டுகளாக தொண்டாற்றிய மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவு செய்தி அறிந்து துயரமடைந்தேன்.