தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கஞ்சாவை டோர் டெலிவரி செய்த இருவர் கைது! - ganja selling

மதுரை: அவனியாபுரத்தில் கஞ்சாவை டோர் டெலிவரி முறையில் விற்பனை செய்துவந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

Two persons arrested for selling ganja
Two persons arrested for selling ganja

By

Published : Nov 19, 2020, 10:08 PM IST

மதுரை அவனியாபுரம் பகுதியில் இளைஞர்களுக்கு டோர் டெலிவரி முறையில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பெத்துராஜ் தலைமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, டூவீலரில் அவனியாபுரம் செம்பூரணி ரோடு பகுதியில் இருவர் வேகமாக செல்லவே, அவர்களை மடக்கிப் பிடித்து போலீசார் சோதனை செய்ததில் 1 கிலோ 500 கிராம் கஞ்சா இருக்கவே, அவர்களை கைது செய்து விசாரித்தனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், வில்லாபுரம் பத்மா தியேட்டர் காலனி பகுதியை சேர்ந்த ஆறுமுகவேல் என்பவரின் மகன் வண்டு சரவணன் மற்றும் முனியசாமி என்பவரின் மகன் லெப்ட் சரவணன் என்பது தெரியவந்தது. இதில் வண்டு சரவணன் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இருவரிடமும் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details