தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாடக்குளம் அருகே ஓய்வு பெற்ற ஊழியருக்கு அரிவாள் வெட்டு! - Madakkulam incident

மதுரை: மாடக்குளம் அரசு மாணவியர் விடுதியருகே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இருவர், ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரை அரிவாளால் வெட்டி அவரிடமிருந்து செல்போனை பறித்துச் சென்றனர்.

மதுரை மாவட்டச் செய்திகள்  மாடக்குளம்  மதுரை செல்போன் வழிப்பறி  Madakkulam robbery  Madakkulam incident  மாடக்குளம் அருகே ஓய்வு பெற்ற ஊழியருக்கு அரிவாள் வெட்டு
மாடக்குளம் அருகே ஓய்வு பெற்ற ஊழியருக்கு அரிவாள் வெட்டு

By

Published : Aug 14, 2020, 4:20 PM IST

மதுரை மாடக்குளம் பெரியார் குறுக்குத் தெரு பகுதியில் குடும்பத்துடன் வசித்துவருபவர் செல்வம்(62). ரயில்வே துறையில் டெக்னீசியனாக வேலை செய்து ஓய்வு பெற்ற இவர், மாடக்குளம் மெயின் ரோட்டில் அதிகாலையில் நடைபயிற்சி செய்வது வழக்கம்.

அதன்படி, இன்றும் (ஆகஸ்ட் 14) நடைபயிற்சி செய்த அவரை அடையாளம் தெரியாத நபர்கள் இருவர், இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்துள்ளனர். அரசு முதுகலை பட்டதாரி மாணவர் விடுதியருகே அவர் நடந்து சென்றபோது, கத்தியால் அவரின் தலையில் வெட்டிவிட்டு அவரிடமிருந்து விலை உயர்ந்த செல்போனை பறித்துச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த எஸ்.எஸ். காலனி காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்த செல்வத்தை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், அப்பகுதியல் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:கரோனா: மதுரையில் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

ABOUT THE AUTHOR

...view details