தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 27, 2020, 9:34 AM IST

ETV Bharat / state

மதுரையில் மேலும் இருவருக்கு கரோனா!

மதுரை: மதுரையில் புதிதாக இருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மதுரை அரசு இராசாசி மருத்துவமனை
மதுரை அரசு இராசாசி மருத்துவமனை

மதுரை அரசு இராசாசி மருத்துவமனையின் பல்நோக்கு சிகிச்சை மைய வளாகத்தில் கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவு இயங்கிவருகிறது.

இங்கு பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களிலிருந்து வரும், கரோனா பாதிப்பு அறிகுறிகள் கொண்ட நபர்கள், தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.

அந்த வகையில் இங்கு கரோனா பாதிப்பிற்குள்ளாகி இதுவரை மொத்தம் 231 பேர் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், தற்போது புதிதாக இரண்டு பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மேலும், இதுவரை 122 பேர் பூரண குணமடைந்து தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், இரண்டு பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இவர்கள் தவிர, தற்போது மொத்தம் 109 பேர் இம்மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

மதுரையில், நேற்று புதிதாக எவரும் பாதிக்கப்படாத நிலையில், தற்போது கரோனா உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 233ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க :தேனி சிறையில் உள்ள கைதிகளுக்கு கரோனா பரிசோதனை

ABOUT THE AUTHOR

...view details