தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேனர்களை அகற்றக்கோரிய வழக்கு: டிராபிக் ராமசாமியை நினைவுகூர்ந்த உயர் நீதிமன்றக் கிளை - மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை: டிராபிக் ராமசாமி போல் அனைத்துக் கட்சி பேனர்களையும் அகற்றக் கூறுவது தான் நியாயம், குறிப்பிட்ட கட்சி பேனர்களை அகற்றக் கூறுவதை ஏற்க முடியாது எனக் குறிப்பிட்டு பேனர்கள் அகற்றக்கோரிய பொது நல வழக்கு ஒன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அனைத்து கட்சி பேனர்களையும் அகற்ற கூறுவது தான் நியாயம்
அனைத்து கட்சி பேனர்களையும் அகற்ற கூறுவது தான் நியாயம்

By

Published : Jun 17, 2021, 9:29 PM IST

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கிஷோர் குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், "சட்டப்பேரவைத் தேர்தலின் வெற்றியை கொண்டாடும் வகையில் ஆளுங்கட்சியினர் திருச்சி மாநகர் முழுவதும் பேனர்களை வைத்துள்ளனர். பேனர்களை வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், எவ்வித அனுமதியின்றி ஆளுங்கட்சியினர் திருச்சி மாநகர் முழுவதும் பேனர்களை வைத்துள்ளனர்.

தற்போது, தமிழ்நாட்டில் காற்று வேகமாக வீசத் தொடங்கியுள்ளது. இதனால், சாலை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்களால் விபத்து ஏற்பட்டு, உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளன. இது தொடர்பாக அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, திருச்சி மாநகர் பகுதி முழுவதும் சட்டவிரோதமாக அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரர் கட்சியில் இருந்து கொண்டு ஒரு குறிப்பிட்ட கட்சி பேனர்களை அகற்றக் கூறுவதை ஏற்க முடியாது.

டிராபிக் ராமசாமி போல் அனைத்துக் கட்சி பேனர்களையும் அகற்றக் கூறுவது தான் நியாயம் எனக் கூறி பொதுநல வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதையும் படிங்க: Battlegrounds Mobile India: முகத்தில் மரு வைத்து வரும் பப்ஜி!

ABOUT THE AUTHOR

...view details