தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"முதலமைச்சரே சிறைக்கு செல்வார்" - அண்ணாமலை பரபரப்பு பேட்டி! - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

'சென்னை மெட்ரோ திட்டத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பான வழக்கில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறைக்கு செல்வார்' என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Annamalai reports about CM
அண்ணாமலை முதலமைச்சர் குறித்து பேட்டி

By

Published : Jun 15, 2023, 10:49 PM IST

மதுரை:மாடக்குளம் பகுதியில் நடைபெற்ற தனியார் தகவல் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்றின் திறப்பு விழாவில் இன்று (ஜூன் 15) பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், ”தமிழக முதலமைச்சர் இன்று காலையில் வரம்பு மீறி பேசியதாகவு, தனது தங்கை கனிமொழி கைது செய்யப்பட்டபோது கூட இந்த அளவுக்குக் கோபப்படாத முதலமைச்சர், அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதுக்கு கோபம் கொள்கிறார் என்றால், அவர்தான் திமுகவின் கருவூலம் என்பது உறுதியாகி உள்ளது என்று கடுமையாக சாடினார். செந்தில் பாலாஜியின் கைதுக்குப் பிறகு ஸ்டாலின் முதலமைச்சரைப் போல நடந்து கொள்ளவில்லை என்றும் முதலமைச்சரின் மருமகன் சபரீசன் மருத்துவமனைக்கே சென்று ஏன் செந்தில் பாலாஜியைப் பார்க்க வேண்டும்? என்று கேள்வியெழுப்பினார். மேலும், எந்த ஒரு சாமானிய மக்களும் செந்தில் பாலாஜியின் கைதை தவறு எனக் கூறவில்லை என்றார்.

இன்றைய பேச்சில் கூட, முதலமைச்சரின் பேச்சு பா.ஜ.க தொண்டர்களை மிரட்டுவது போன்றே உள்ளதாகவும், எதற்கும் நாங்களும் தயாராகவே உள்ளோம் என்று கூறிய அவர், எங்கள் தொண்டர்கள் மீது கை வைத்துப் பாருங்கள் என முதலமைச்சருக்கு நான் பதில் சவால் விடுகிறேன் என்று தெரிவித்தார். தி.மு.க குண்டர்கள் வீதிக்கு வருவது தமிழகத்திற்கு புதிது அல்ல என்றும் நிலைமை கை மீறினால் நாங்கள் கோட்டைக்கே வருவோம் என்றும் நீங்கள் கொடுத்தால் பதிலுக்கு நாங்களும் கொடுப்போம் என்றும் கூறினார். பழைய பா.ஜ.க அல்ல; தனது கோபத்தை ஊழல் செய்த அமைச்சர் மீது காட்டாமல் பா.ஜ.க தொண்டர்கள் மீது காட்டுவது என்ன நியாயம்? என்று மீண்டும் கேள்வியெழுப்பினார்.

மேலும் பேசிய அவர், டி.ஆர்.பாலு என் மீது தொடுத்துள்ள அவதூறு வழக்கில் உரிய ஆவணங்களுடன் ஆஜராக தயாராக உள்ளதாகவும், மனித உரிமை ஆணைய தலைவரை தங்கள் கட்சியின் உறுப்பினரைப் போன்று தி.மு.க. பயன்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்தால், அது பா.ஜ.க-வுக்கு தான் லாபம் என்றார்.

காரணம், கொள்கை முரண்பாடுகள் கொண்ட கட்சிகள் ஒன்றிணைவதை இந்திய மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் அக்கட்சிகள் தனித்தனியாக பெறுகின்ற வாக்குகளைவிட ஒருங்கிணைவதன் மூலம் மிகக் குறைவாகவே பெறுவார்கள் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன என்றார். ஆகையால், எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவைக் கண்டு, பாஜக பயப்படவில்லை என்றும் அது ஒருபோதும் நடக்கவும் வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார். வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் (Lok Sabha 2024) தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 இடங்களையும் கைப்பற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அதே நேரத்தில் தி.மு.க கூட்டணி ஒரு இடத்தையும் கூட பெறாது என்று தெரிவித்தார்.

தனது அமைச்சரின் மருத்துவ சிகிச்சைக்குக்கூட தனியார் மருத்துவமனையை தான் தி.மு.க அரசு நாடுகிறது என்றால், இதுதான் திராவிட மாடல் என்று கூறிய அவர், அரசு மருத்துவமனைகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதியை மேம்படுத்தியுள்ளதாக சொல்லும் தி.மு.க, திராவிட மாடல் தோற்றுவிட்டது என்று விமர்சித்தார்.

சென்னை மெட்ரோ வழக்கை விசாரிக்க சி.பி.ஐ வருகிறது என்று தெரிந்துதான், தமிழக அரசு சிபிஐக்கு எதிராக உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறை செல்வது உறுதி. ஆனாலும், நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம்” என்று கூறியுள்ளார் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை.

இதையும் படிங்க:"அண்ணாமலை தான் இதயக்கனி, அதிமுகவினருக்கு பொறாமை" - சொல்கிறார் கரு.நாகராஜன்

ABOUT THE AUTHOR

...view details