தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையில் 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் - காவல்துறை பதிலளிக்க உத்தரவு - tirunelveli 3 students death case school Correspondent petition seeking of release from case

நெல்லை தனியார் பள்ளி கழிவறை இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி பள்ளி தாளாளர் தொடர்ந்த வழக்கில் காவல்துறையினர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லை 3 பள்ளி மாணவர்கள் பலி: வழக்கிலிருந்து பள்ளி தாளாளரை விடுவிக்கும் சாத்தியக் கூறுகள் உள்ளதா ?
நெல்லை 3 பள்ளி மாணவர்கள் பலி: வழக்கிலிருந்து பள்ளி தாளாளரை விடுவிக்கும் சாத்தியக் கூறுகள் உள்ளதா ?

By

Published : Jan 25, 2022, 7:20 AM IST

மதுரை: திருநெல்வேலி டவுனில் உள்ள சாப்டர் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் கடந்த டிச. 17ஆம் தேதி கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் அன்பழகன், சுதீஸ், விஸ்வரஞ்சன் ஆகிய 3 மாணவர்கள் பலியாகினர். மேலும் 3 மாணவர்கள் படுகாயமும் 2 மாணவர்கள் லேசான காயமும் அடைந்தனர்.

இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நடைபெற்றதாக சக மாணவர்கள் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

பள்ளியின் தாளாளர் சாமுவேல் செல்வகுமார், பள்ளியின் தலைமை ஆசிரியை ஞான செல்வி

இதில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தாளாளர் சாமுவேல் செல்வகுமார், பள்ளியின் தலைமை ஆசிரியை ஞான செல்வி, கட்டட ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி உள்ளிட்ட 3 பேர் மீது நெல்லை சந்திப்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நெல்லை 3 பள்ளி மாணவர்கள் பலி

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, பள்ளியின் தாளாளர் செல்வகுமார், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்தார். அதில், சம்பவம் நடந்த சில மாதத்திற்கு முன்புதான் பணியில் சேர்ந்ததாக கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சம்பந்தப்பட்ட வழக்கிலிருந்து மனுதாரரை விடுவிக்கும் சாத்தியக் கூறுகள் உள்ளதா என்பது குறித்து, காவல்துறையினர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜன. 27க்கு தள்ளி வைத்தார்.

இதையும் படிக்க: Omicron BA-2 உருமாறிய வைரஸ்: இந்தூரில் குழந்தைகள் உள்பட 16 பேருக்கு பாதிப்பு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details