மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கூத்தியார்குண்டு என்னுமிடத்தில் அமைந்துள்ளது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு. இம்மையத்தில், மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் நெல் மூட்டைகள் சேமித்து வைக்கப்படுகிறது.
லாரிகள் மூலம் எடுத்து வரப்படும் நெல் மூட்டைகளை அங்குள்ள தற்காலிக சுமை தூக்கும் தொழிலாளர்கள் 200க்கும் மேற்பட்டோர், கிட்டங்கியில் இறக்கி சேமித்து வைக்கும் பணியில் ஈடுபடுவர். அவ்வாறு சுமை தூக்கும் தொழிலாளர்கள் செய்யும் பணிக்கு ஆண்டுதோறும் தீபாவளியன்று அளிக்கக்கூடிய போனஸ் தொகை, இதுவரை அளிக்கப்படவில்லை எனத் தெரிகிறது.