தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 19, 2020, 10:45 AM IST

ETV Bharat / state

மதுரையில் மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதி

மதுரை: மூன்று நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

corona
corona

மதுரையில் அரசு இராசாசி மருத்துவமனை பல்நோக்கு சிகிச்சை மைய வளாகத்தில் இயங்கிவரும் கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மதுரை மாநகர், மாவட்டம், அருகிலுள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நபர்களும் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில் முன்கள சுகாதாரப் பணியாளர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தானியங்கி ரோபோ அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டு அதன் மூலமாக நோயாளிகளுக்கு தேவையான மருந்து, உணவு வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த மருத்துவமனையில் தற்போது வரை 160 பேர் சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில் நேற்று (மே 18) மூவர் புதிதாக வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 108 பேர் முழு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனின்றி இருவர் மரணமடைந்துள்ளனர். தற்போது 53 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details