தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மன்னர் திருமலை நாயக்கரின் 437ஆவது பிறந்த நாள் விழா - அமைச்சர்கள் மரியாதை - thirumalai nayakkar birthday

மதுரை: திருமலை நாயக்கரின் 437ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழ்நாடு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருமலை நாயக்கர் பிறந்தநாள் விழா  திருமலை நாயக்கர் திருவுருவச்சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை  thirumalai nayakkar birthday  thirumalai nayakkar birthday celeberation
திருமலை நாயக்கர் 437வது பிறந்தநாள்

By

Published : Feb 8, 2020, 10:45 PM IST

விஜயநகர பேரரசின் தொடர்ச்சியாக நாயக்கர்கள் மதுரையை கி.பி. 1529ஆம் ஆண்டு முதல் கி.பி. 1736ஆம் ஆண்டுவரை என 209 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர். அவர்களுள் திருமலை நாயக்கர் குறிப்பிடத்தகுந்த மன்னராவார். இவரின் 437ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி தமிழ்நாடு அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜூ மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சரவணன், ராஜன் செல்லப்பா ஆகியோர் கலந்துகொண்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

திருமலை நாயக்கர் 437வது பிறந்தநாள்

மேலும், தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமை செயலர் ராம் மோகன ராவ் தனியே தனது ஆதரவாளர்களுடன் வருகை தந்து திருமலை நாயக்கரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இதையும் படிங்க: பொருளாதார மந்த நிலையை திசை திருப்பவே கொடிய சட்டம்: மு.க. ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details