மதுரை: பெண் பத்திரிகையாளர்கள் பணிபுரிவது குறித்த சர்ச்சைக்குரிய கருத்தொன்றை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி. சேகர் 2018ஆம் ஆண்டு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பலர் புகார் அளித்தனர்.
அதனடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் மூன்று பிரிவுகள், பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்புச் சட்டத்தில் ஒரு பிரிவு என நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளது.
பதில் மனு தாக்கலுக்கு அவகாசம்