தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார் கோவில் பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "இந்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வருகின்ற 14ஆம் தேதி ( சனிக்கிழமை) தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார் கோவில் வடக்கு வீதியில் மாலை 6 மணி முதல் 10 மணி வரை குடியுரிமை திருத்தட் சட்டத்தை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தப் பொதுக்கூட்டத்தில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா பங்கேற்று பேசுகிறார். இந்த பொதுக் கூட்டத்திற்கு நாச்சியார் கோவில் காவல்துறை ஆய்வாளரிடம், அனுமதி கேட்டும் அனுமதி வழங்கவில்லை. எனவே சட்டத்திற்குட்பட்டு ஜனநாயக ரீதியில் நடைபெறும், இந்த பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.