மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. அக்கோயிலில் தெய்வானை என்ற யானையை, காளிமுத்து என்ற பாகன் தினமும் பராமரித்து வந்துள்ளார்.
இந்நிலையில் பாகன் இன்றும் வழக்கம்போல யானையைக் குளிப்பாட்டுவதற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது திடீரென அந்த யானை, காளிமுத்துவை தூக்கி வீசி, மிதித்துள்ளது. இதில் படுகாயமடைந்த பாகன் உடனடியாக, மதுரை ராசாசி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.