மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ளது மேலவளவு. இதனை அடுத்துள்ள கீழ பட்டியைச் சேர்ந்தவர் மோகன், சகுந்தலா(26) தம்பதியினர். இவர்களுக்கு சேதுபதி, காமாட்சி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேலும் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டையும் சச்சரவுமாக இருந்து வந்துள்ளது.
இதனால், சகுந்தலா தனது கணவனைப்பிரிந்து, கடந்த 5 ஆண்டுகளாகத் தனது தாயாரின் வீட்டிலேயே வசித்து வந்த நிலையில், அங்கு ஒருவரோடு திருமணத்தைத் தாண்டிய பழக்கம் ஏற்பட்டு, நெருங்கிப் பழகி வந்துள்ளதாகத்தெரிகிறது.
இதனை சகுந்தலாவின் அண்ணன் சௌந்தரபாண்டியன் பலமுறை தட்டிக்கேட்டும், அதனை ஒரு பொருட்டாகக்கூட சகுந்தலா மதிக்கவில்லை எனக்கூறப்படுகிறது.