இலங்கையைச் சேர்ந்த பிரபல நிழலுலக தாதா அங்கோடா லொக்கா உடல் மதுரையில் அழிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, அவருக்கு உதவியதாகக் கருதப்படும் வழக்கறிஞர் சிவகாமிசுந்தரி தங்கியிருந்த மதுரை ரயில் நகர் பகுதியில் உள்ள வீடுகள், அலுவலகத்தில் சிபிசிஐடி காவல் துறையினர் நேற்று (ஆக. 6) விசாரணை மேற்கொண்டனர்.
சிவகாமி சுந்தரியின் அலுவலகத்தில் 13 மணி நேரம் நடத்திய சோதனையில், அங்கிருந்து மூன்று பாஸ்போர்ட், வெளிநாட்டு கரன்சிகள், நகைகள், வங்கி ஆவணங்கள், பத்திரங்கள் உள்ளிட்ட ஏராளமான ஆவணங்களை சிபிசிஐடி காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.