தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2020ஆம் ஆண்டு மஞ்சுவிரட்டை காண மோடி வரவேண்டும்! - முகிலன் - மஞ்சுவிரட்டை காண மோடி வரவேண்டும்

மதுரை: 2020ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மஞ்சுவிரட்டுப் போட்டியை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தால் மகிழ்ச்சி என சமூக செயற்பாட்டாளர் முகிலன் தெரிவித்துள்ளார்.

முகிலன் பேட்டி

By

Published : Nov 23, 2019, 2:50 AM IST


இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகளின் பட்டியலில் இருந்து காளையை நீக்கி விட்டு மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண பிரதமர் மோடி வர வேண்டும். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நீதிமன்ற விசாரணை என்ற பெயரில் அலைகழிக்கப்படுகின்றனர்.


முகிலன் பேட்டி
தமிழ்நாடு கால்நடை இனப்பெருக்க பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் சட்ட மசோதா ஒன்றை கொண்டு வர உள்ளது. இதனால் நாட்டு மாடு வைத்திருப்பவர்கள் நேரடியாக பசுவோடு கலக்க விடக்கூடாது. அதற்கு அரசின் பல்வேறு துறைகளின் அனுமதி பெற வேண்டும். தனியாக தொழுவம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதிக்கப்பட்டுள்ளது. இது நாட்டு மாடு இனங்களை அழிப்பதற்கான முயற்சியாகும். அதனால் தமிழ்நாடு அரசு கால்நடை இனப்பெருக்க பாதுகாப்பு மசோதாவை கொண்டுவந்தால் தமிழ்நாட்டின் நாட்டு மாடு இனங்களை அழித்து விடலாம் என நினைக்கின்றனர்.தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த சட்டமசோதவை திரும்பப் பெற வேண்டும். கால்நடை இனப்பெருக்க பாதுகாப்பு சட்ட மசோதவை எதிர்த்து தமிழக அரசியல் கட்சிகள் இணைந்து கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக போராடியவர்களை காவல்துறையை வைத்து ஆட்சியாளர்கள் எப்படி நடத்தினார்கள் என்பதை சுட்டிக்காட்டி தண்டனை வழங்க குரல் கொடுக்க வேண்டும். தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்ட கர்நாடகா அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனால் தமிழ்நாடு உரிமை இழந்த மாநிலமாக மாறி வருகிறது, இவ்வாறு கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details