தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 25, 2020, 9:19 AM IST

ETV Bharat / state

மதுரையில் மேலும் ஆறு பேருக்கு கரோனா!

மதுரை: மதுரையில் புதிதாக ஆறு பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனை
மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனை

மதுரை அரசு இராசாசி மருத்துவமனையின் பல்நோக்கு சிகிச்சை மைய வளாகத்தில் கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவு இயங்கிவருகிறது.

இங்கு பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களிலிருந்து வரும், கரோனா பாதிப்பு அறிகுறிகள் கொண்ட நபர்கள், தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.

அந்த வகையில் இங்கு கரோனா பாதிப்பிற்குள்ளாகி இதுவரை மொத்தம் 225 பேர் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், நேற்று புதிதாக ஆறு பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 231ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இதுவரை 115 பேர் பூரண குணமடைந்து தங்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், இரண்டு பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

வீடு திரும்பியவர்கள் தவிர்த்து, தற்போது மொத்தம் 114 பேர் இம்மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மதுரையைப் பொறுத்தவரை, பிற மாநிலங்களிலிருந்து அங்கு வருபவர்கள்தான் தொடர்ந்து கரோனா பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :இன்று முதல் உள்நாட்டு விமான சேவை தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details