தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி மாணவிகள் இடையே மோதல் - வைரலாகும் வீடியோ - மாணவிகள் மோதல்

மதுரையில் இரு தரப்பு பள்ளி மாணவிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், அவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொள்ளும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

பள்ளி மாணவிகள் இடையே மோதல்
பள்ளி மாணவிகள் இடையே மோதல்

By

Published : May 1, 2022, 6:29 AM IST

மதுரை மாநகரின் முக்கிய பேருந்து நிலையமாக பெரியார் பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. இந்தப் பேருந்து நிலையத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் வருகையால் பேருந்து நிலையம் அளவுக்கதிகமான கூட்டத்துடன் காணப்படும்.

இந்நிலையில் நேற்று (ஏப்.30) மாலை 4 மணியளவில் பள்ளியில் இருந்து வீட்டிற்குத் திரும்ப, பெரியார் பேருந்து நிலையத்திற்கு பள்ளி மாணவிகள் வந்துள்ளனர். அங்கிருந்த இரு தரப்பு மாணவிகளுக்கு இடையே கடந்த மூன்று நாள்களாக கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இரண்டு நாள்களாகவே மாணவிகள் பெரியார் பேருந்து நிலையத்தில் சண்டையிட்டுக் கொள்வது வாடிக்கையாக இருந்துள்ளது. அந்த தகராறு, நேற்று பெரிய சண்டையாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரியார் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பள்ளி மாணவிகள் இடையே மோதல்

இதனைக் கண்ட பயணிகள் மிகவும் வெறுப்போடு சென்றதோடு மட்டுமில்லாமல் இன்றைய சமுதாயம் சீரழிந்து போகிறது என்று வேதனையடைந்தனர். மதுரை மாநகர காவல் துறையினரும், அரசும் மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் வைத்தனர்.

இதையும் படிங்க:அரசுப் பள்ளி மாணவர்களிடம் அதிகரிக்கும் வன்முறை... நல்லொழுக்கத்தை கற்பிப்பத்தில் கோட்டை விட்டதா கல்வித் துறை..?

ABOUT THE AUTHOR

...view details