மதுரை: சாத்தான்குளம் காவல் நிலைய தலைமைகாவலர் பியூலா, ரேவதி உள்ளிட்ட ஆறு காவல்துறையினர் கோவில்பட்டி கிளை சிறை கண்காணிப்பாளர் சங்கர், கோவில்பட்டி மற்றும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் இந்த வழக்கின் சாட்சிகளாக குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குற்றப்பத்திரிகையில் மாஜிஸ்திரேட் பாரதிதாசனின் விசாரணை அறிக்கையும், டெல்லியில் உள்ள தடயவியல் ஆய்வு மையத்தின் அறிக்கையும் இடம்பெற்றுள்ளது.