சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ அலுவலர்களின் விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை உள்பட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கூறிய 10 பேரில், முதன்மை குற்றவாளிகளாக கருதப்படும் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் உள்ளிட்ட ஐந்து பேரையும் காவலில் எடுக்க மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மத்திய புலனாய்வு குழு (சிபிஐ) மனு தாக்கல் செய்தது.