கரோனா நோய்த் தொற்று பரவுதல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், நோய்த் தொற்றை கட்டுப்படுத்த மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் இரவுப் பகலாக பணிபுரிந்து வருகின்றனர்.
இதனால், மத்திய மாநில அரசுகள், பொதுமக்கள், தனியார் அமைப்புகள் அவர்களை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தூய்மைப் பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக திமுக சார்பில் சிவப்பு கம்பள வரவேற்புடன் பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது.