தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 24, 2019, 11:10 AM IST

ETV Bharat / state

பண நாயகத்தால் ஜனநாயகத்தை வெல்ல முடியாது - சு. வெங்கடேசன்

மதுரை: மக்கள் சிறந்த முடிவெடுத்து என்னை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப உள்ளதற்கு நன்றி என சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

File pic

மதுரை மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளராக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் சார்பில் போட்டியிட்ட சு. வெங்கடேசன் வெற்றிபெற்றார். வெற்றிபெற்ற வெங்கடேசனுக்கு மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர் நாகராஜன் வெற்றி சான்றியிதழ்களை வழங்கினார்.

இதனையடுத்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, மதுரை மக்கள் சிறப்பாக முடிவெடுத்து என்னை நாடாளுமன்றத்திற்கு அனுப்பும் நோக்கோடு ஒரு ரூபாய் கூட வாக்குக்கு பணம் வாங்காமல் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வாக்களித்து உள்ளனர்.

பணநாயகத்தால் ஜனநாயகத்தை வெல்ல முடியாது என்பதை மதுரை மக்கள் உறுதி செய்துள்ளனர். இதற்கு நன்றி என்று தெரிவித்தார்.

சு. வெங்கடேசன்

ABOUT THE AUTHOR

...view details