தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 1, 2022, 7:22 PM IST

ETV Bharat / state

‘அமைச்சர் மூர்த்தியின் இல்ல திருமணத்தைப் பற்றி பேசியதில் என்ன தவறு?’ - ஆர்.பி. உதயகுமார் கேள்வி

ஆடம்பர திருமணத்தைப் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசியதில் என்ன தவறு உள்ளது என்று கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர் ஆர்பி உடயகுமார், அமைச்சர் மூர்த்தியிடம் நேருக்கு நேராக விவாதம் செய்ய தயார் என்று சவால் விடுத்துள்ளார்.

Etv Bharat ஆர்பி உதயகுமார் பேச்சு
Etv Bharat ஆர்பி உதயகுமார் பேச்சு

மதுரை:முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அமைச்சர் மூர்த்தியின் இல்ல திருமணம் குறித்து விமர்சித்து பேசிய பேச்சுக்கு அமைச்சர் மூர்த்தி கண்டனம் தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், “அமைச்சர் மூர்த்தி நடத்திய ஆடம்பர திருமணத்தை நாட்டு மக்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளனர். உலை வாயை மூடலாம், ஆனால் ஊர் வாயை மூட முடியாது. நீங்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டீர்கள் மூன்று கோடி என்று.

மக்களுக்கு திட்டங்கள் என்றால் நிதிநிலை பற்றாக்குறை என்று கூறப்படுகிறது. அம்மா உணவகத்திற்கு நிதி பற்றாக்குறை என்று கூறப்படுகிறது. மடிக்கணினி, தாலிக்கு தங்கம் திட்டம் குறித்து கேட்டால் நிதி பற்றாகுறை என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது ஆடம்பரமாக திருமணம் நடைபெற்றது. மதுரையில் எந்த அமைச்சர் குடும்பத்திலும் இதுபோன்று திருமணம் நடக்கவில்லை, இதில் எடப்பாடி பழனிசாமி பேசியதில் எந்த தவறும் இல்லை” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “அதிமுக ஆட்சியில் கனிமவளத் துறை வணிகவரித்துறையில் நடைபெற்றவை குறித்து புள்ளி விவரங்களோடு விவாதிக்க நான் தயார். கடந்த ஒன்றறை ஆண்டு காலம் நாட்டு மக்களுக்கு நீங்கள் செய்த சேவையை விவாதிக்க தயாரா? எடப்பாடியிடம் உதவி கேட்காதவர்கள் யாரும் கிடையாது, அமைச்சர் மூர்த்தி பதவி மோகத்தில் பேசுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அவர் கூறியது தவறு என்றால் நீங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாமே, உங்களுக்கே தயக்கம் ஏன்? அமைச்சர் மூர்த்தி கனிம வளத் துறையை கையில் வைத்துக்கொண்டு நீங்கள் என்ன சேவை ஆற்றினீர்கள் என்பது எங்களுக்கு தெரியும். அரசியல் நாகரீகம் கருதி இதுபோன்ற, அநாகரிகமான முறையில் பேசுவதை அமைச்சர் மூர்த்தி நிறுத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் பேசினால் உங்களை பற்றி வெட்ட வெளியில் பேச தயங்க மாட்டோம். அதற்காக நீங்கள் பழி வாங்கும் நடவடிக்கையை கையில் எடுத்தாலும் அதற்கும் அஞ்ச மாட்டோம்.

ஆர்பி உதயகுமார் பேச்சு

மதுரையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியை வைத்து 120 ஜோடி ஏழை, எளிய மக்களை தேர்வு செய்து திருமணத்தை நடத்தினோம், ஜல்லிக்கட்டு விழாவை முதன் முதலில் ஒரு முதலமைச்சர் பச்சை கொடி அசைத்து தொடங்கி வைத்தார் என்றால் அது எடப்பாடி பழனிசாமிதான். ஏன் நீங்கள் சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது அப்போது முதலமைச்சரை அழைத்து வந்திருக்கலாமே, ஜல்லிக்கட்டு விழாவிற்கு சாப்பாடு போட்டோம் என்று கூறுகிறீர்கள், இதே கரோனா காலத்தில் முகம் தெரியாத நபர்களுக்கு நாங்கள் உணவு வழங்கினோம்” விமர்சித்தார்.

இதையும் படிங்க:படிப்பினை முடித்த மருத்துவர்களுக்கான பயிற்சியை உடனடியாக வழங்குக... ஓபிஎஸ்...

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details