தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'புதுச்சேரி மக்களுக்கு ரங்கசாமியை விட்டால் வேறு ஆள் இல்லை'- முன்னாள் அமைச்சர் - Former Puducherry Minister

புதுச்சேரி மக்களுக்கு என். ரங்கசாமியை விட்டால் வேறு ஆள் இல்லை, அவர்தான் விரைவில் புதுச்சேரியை ஆளப்போகிறார் என புதுச்சேரி முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் என்.ஜி. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

n r congress  n rangasamy  Former Puducherry Minister  Rangasamy
'புதுச்சேரி மக்களுக்கு ரங்கசாமியை விட்டால் வேறு ஆள் இல்லை'- முன்னாள் புதுச்சேரி அமைச்சர்

By

Published : Mar 2, 2021, 3:13 PM IST

மதுரை: புதுச்சேரி மாநில முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் என்.ஜி. பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சாமி தரிசனம்செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "புதுச்சேரியில் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், அனைத்துத் தரப்பினரும் ஆவலுடன் எதிர்பார்க்கக்கூடிய என். ரங்கசாமி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என வேண்டி சாமி தரிசனம்செய்துள்ளேன்.

நிச்சயமாக திருப்பரங்குன்றம் குமரன் எங்களுடைய என். ராமசாமிக்கு ஆசி வழங்குவார். விரைவில் புதுச்சேரியில் என். ரங்கசாமி தலைமையில் ஆட்சி அமையும்.

மக்களுடைய அனைத்துப் பிரச்சினைகளும் தீர்த்துவைக்கப்படும். அவரைத்தான் இன்றைக்கு புதுச்சேரி மக்கள் நம்பியிருக்கின்றனர். அவரை விட்டால் புதுச்சேரி மக்களுக்கு வேறு ஆள் இல்லை" என்றார்.

இதையும் படிங்க:டிடிவி, கமலுடன் மூன்றாவது கூட்டணியா?

ABOUT THE AUTHOR

...view details