தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், கடலூர் என்எல்சி சார்பாக தூத்துக்குடி மாவட்டம் மேலபாண்டியாபுரம் பாறைகுட்டம், முறம்பன் ஆகிய பகுதிகளில் அனல் மின் நிலையத்தில் இருந்து வரும் சாம்பல்களை சுத்திகரித்து அனுப்புவதற்காக , சுற்று சூழல் பாதுகாப்பிற்காக இடம் கையகப்படுத்தப்பட்டது . இதற்கு உரிய நிவாரணமும் வழங்கப்பட்டது .
இந்த நிலையில் , இந்த என்எல்சி-க்கு சொந்தமான இடத்தில் விவிட் என்ற தனியார் சூரிய மின்சக்தி திட்டத்திற்காக அதிக சக்தி வாய்ந்த மின் கம்பிகளை கொண்டு செல்லும் மின் கோபுரங்களை அமைக்கின்றனர் .