தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாட்டின் 4 மாவட்ட கோயில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு

By

Published : Oct 30, 2022, 8:54 AM IST

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை, திண்டுக்கல், தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களில் நடைபெற இருந்த கோயில் விழாக்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளின் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தேவர் ஜெயந்தியன்று நடக்கவிற்கும் கோவில் திருவிழாக்களின் தேதி ஒத்திவைப்பு- உயர்நீதிமன்றம் மதுரை கிளை
தேவர் ஜெயந்தியன்று நடக்கவிற்கும் கோவில் திருவிழாக்களின் தேதி ஒத்திவைப்பு- உயர்நீதிமன்றம் மதுரை கிளை

மதுரை, திண்டுக்கல், தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள பல்வேறு கிராமங்களில் கோயில் திருவிழாக்களை முன்னிட்டு அக் 30, 31 மற்றும் நவம்பர் 1ஆம் தேதி ஆகிய நாட்களில் இரவு 7 மணி முதல் 11 மணி வரை ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க கோரி காவல்துறைக்கு உத்தரவிட கோரி பல்வேறு மனுக்கள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் நீதிபதி சக்தி சுகுமார குரூப் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவர் குருபூஜை 30ஆம் தேதி நடக்க இருப்பதால் ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகையால் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருவதால் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு போதிய பாதுகாப்பு வழங்குவதில் சிரமம் ஏற்படும் ஆகையால் நிகழ்சிக்கு அனுமதிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர்கள் தரப்பில், பல ஆண்டுகளாக கோயில்களில் விழாக்கள் நடைபெற்று வருகிறது. இதை திடீரென்று நிறுத்த முடியாது. இதனை கருத்தில் கொண்டு ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கப்பட்டது.

இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, அரசு தரப்பில் கூறிய காரணங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளதால் மனுதாரர்கள் குறிப்பிட்ட தேதிக்கு பதிலாக மாற்று தேதியில் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரலாம். அதுகுறித்து காவல்துறையிடம் மனு அளிக்கலாம். அதனை பரிசீலனை செய்து உரிய உத்தரவை காவல்துறையினர் பிறப்பிக்க வேண்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க:"முல்லைப் பெரியாறு அணை விவகாரம் - கேரளா ஒத்துழைப்பு மறுப்பு"

ABOUT THE AUTHOR

...view details