திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த சந்திரமோகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "முள்ளிக்குளம் கிராமம் வாசுதேவநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியிலேயே உள்ளது. பல ஆண்டுகளாக வாசுதேவநல்லூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதியாக உள்ளது. எஸ்சி, எஸ்டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலான அளவில் இருப்பதால் அவர்களுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.