மதுரை: புதுக்கோட்டை மாவட்டம் பென்னமராவதியில்கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தாய் - மகன் மர்மமான நிலையில் கொலை செய்யப்பட்டனர். மேலும் அவர்களது வீட்டிலிருந்த சிசிடிவி கேமராக்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இந்த சம்பவம் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடிப்பதற்காக நடந்ததா? அல்லது முன் விரோதம், தொழில் போட்டி போன்ற வேறு காரணங்களால் நடந்ததா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக, வீட்டின் மாடியில் குடியிருந்த வள்ளி மயில் என்பவரை காவல்துறையினர் விசாரித்து வந்தனர். மேலும் தற்போது அவருக்கு உன்மை கண்டறியும் மேற்கொள்ள ஆயுத்தமாகியுள்ளனர். இந்நிலையில், வள்ளி மயில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், "புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிகப்பி இவரது மகன் பழனியப்பன் இருவரும் வீட்டிலிருந்த போது கொலை செய்யப்பட்டனர். வீட்டிலிருந்த நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. இது தொடர்பாக பொன்னமராவதி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை, கொள்ளை சம்பம் நடந்த வீட்டின் மாடியில் வள்ளி மயில் ஆகிய நான் வாடகைக்கு வசித்து வந்தேன். எனவே, இந்த கொலை, கொள்ளை சம்பவம் நடந்த 2ஆம் நாளிலிருந்து பொன்னமராவதி போலீசார், என்னைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். கொலை, கொள்ளை வழக்கில் என்னைக் குற்றவாளியாக ஆக்குவதற்காக உண்மை கண்டறியும் சோதனையை செய்யப் போவதாக தெரிகிறது.