தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஷோரூமிலிருந்து பைக் திருடிய மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!

இரு சக்கர வாகன ஷோரூமிலிருந்து புதிய பைக்குகளைத் திருடிச் சென்ற திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

mysterious-person
mysterious-person

By

Published : Oct 3, 2020, 4:13 PM IST

மதுரை: மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் போத்திராஜ். இவர், கடந்த சில நாள்களுக்கு முன் நாகமலைபுதுக்கோட்டை அருகேயுள்ள கல்வி நகரில், ஹரி மோட்டார்ஸ் எனும் இரு சக்கர வாகன ஷோரூமை திறந்து நடத்தி வருகிறார்.

நேற்று இரவு வழக்கம் போல கடையை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். இன்று காலையில் கடையை திறக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, ஷோரூமில் நிறுத்தப்பட்டிருந்த இரு இருசக்கர வாகனங்கள் திருடு போனதை அறிந்தார்.

இதனைத் தொடர்ந்து, போத்திராஜ் நாகமலைபுதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் டூவீலர்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க :ரேஷன் அரிசி கடத்திச் சென்ற இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details