தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிடா சண்டை விழா நடத்த அனுமதி கோரி மனு - மீண்டும் மனு அளிக்க நீதிமன்றம் உத்தரவு - விருதுநாகர் கிடா முட்டு

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மே 28ஆம் தேதி விருதுநகர் ஆவியூர், அய்யனார் கோயில் அருகே கிடா சண்டை நடத்த அனுமதி கோரிய வழக்கை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை முடித்து வைத்துள்ளது.

நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்றம் உத்தரவு

By

Published : Apr 28, 2022, 6:55 AM IST

விருதுநகர்: காரியாபட்டியைச் சேர்ந்த கோபால் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "இந்த ஆண்டும் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு மே 28 தேதி கிடா சண்டை விழாவை நடத்த அனுமதி கோரி ஆவியூர் காவல் நிலையத்தில் மனு அளித்தும், இதுவரை எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை.

ஆகவே, மே 28ஆம் தேதி ஆவியூர், அய்யனார் கோயில் அருகே கிடா சண்டை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்." என கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில், கிடா சண்டை போட்டிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நீதிபதிகள், தேவைப்பட்டால் மனுதாரர் மீண்டும் ஆவியூர் காவல் நிலைத்தில் மனு அளிக்கலாம் என விலக்கு அளித்து வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க:நளினி தடா-வில் தண்டிக்கப்பட்டாரா? - சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை சமர்ப்பிக்க பதிவுத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details