தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 23, 2022, 10:13 AM IST

ETV Bharat / state

மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு ஐஏஎஸ் பதவி உயர்வு வழங்க கோரி மனு

மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு ஐஏஎஸ் பதவி உயர்வு வழங்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை
உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை

மதுரை: வளர்நகரைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “தகுதியான மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு ஐஏஎஸ் பதவி உயர்வு வழங்க ஒன்றிய அரசின் ஆய்வுக்குழு முடிவு செய்யும்.

ஒன்றிய ஆய்வுக்குழுவின் கூட்டம் நடத்தப்பட்டால் எனக்கு ஐஏஎஸ் பதவி உயர்வு கிடைத்திருக்கும். எனவே, ஐஏஎஸ் பதவி உயர்வு வழங்குவதற்காக ஒன்றிய அரசின் ஆய்வுக்குழு கூட்டம் நடத்த உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது , "அரசு ஊழியர்கள் பதவி உயர்வை ஒரு உரிமையாக கேட்க முடியாது. பதவி உயர்வு அடிப்படை உரிமைகளில் ஒன்று தான். அதே நேரத்தில் பதவி உயர்வுக்கான தகுதியான நபர்களை நிர்வாகம் தான் தேர்வு செய்யும்.

பதவிக்கு உயர்வுக்கு தகுதியானவர்களாக இருந்தாலும் தனக்கு பதவி உயர்வு வழங்குமாறு நிர்வாகத்தை வலியுறுத்த முடியாது. மனுதாரர் தற்போது மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிகிறார். ஒன்றிய ஆய்வுக்குழு கூட்டம் நடந்திருந்தால் தனக்கு ஐஏஎஸ் பதவி உயர்வு கிடைத்திருக்கும் என மனுதாரர் கூறியுள்ளார்.

இது இயற்கையில் கற்பனையானது. எதிர்கால நிகழ்வுகள் குறித்து உயர் நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது. இந்த வழக்கில் ஒன்றிய அரசின் சீராய்வுக்குழு கூட்டம் உரிய காலத்தில் நடைபெறவில்லை. ஐஏஎஸ் பதவி உயர்வு தொடர்பாகவும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:சசிகலாவை ஆணையம் மீண்டும் அழைக்காது - வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்

ABOUT THE AUTHOR

...view details