தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 20, 2021, 1:55 AM IST

ETV Bharat / state

பாலம் கட்ட மக்கள் எதிர்ப்பு; காவல் துறை தடியடி

மதுரை: பொது இடத்தில் பாலம் கட்ட எதிர்ப்பு தெரிவித்த மக்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாலம் கட்ட எதிர்ப்பு
பாலம் கட்ட எதிர்ப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள உத்தப்புரம் கிராமத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் இருபிரிவினரிடையே பிரச்னை நிலவிவருகிறது. இந்நிலையில் அந்த கிராமத்தில் பாலம் அமைக்க மற்றொரு தரப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் பலமுறை அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் முடிவு எட்டப்படாத நிலையில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் பாலத்தை கட்டுவதற்கு உத்தரவு வழங்கப்பட்ட நிலையில் இன்று காலை அரசு அலுவலர்கள் தலைமையில் பாலம் கட்டுவதற்கான பணிகளை தொடங்க வந்தனர்.

மற்றொரு தரப்பினர் பொது இடத்தில் பாலம் கட்டுவதால் இரு தரப்பு மோதல் நடக்கும் என பாலத்தை மாற்று இடத்தில் அமைக்கக் கோரி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் நூற்றுக்கணக்கான காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் மற்றும் இளைஞர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தி கைது செய்தனர்.

அப்போது பெண்கள் மற்றும் காவல் துறையினர் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. குழந்தைகளுடன் வந்த தாய்மார்களையும் தரதரவென இழுத்துச் சென்று காவல் துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல் துறையின் நடவடிக்கைகளை கண்டித்து உத்தப்புரம் கிராம பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details