மதுரை குற்றப்பிரிவு பகுதியில் மதீனா பள்ளிவாசல் சார்பில் இன்று சட்டப்பேரவை கேள்வி நேரத்தின்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து உரிய விளக்கம் அளிக்காததைக் கண்டித்து சுமார் 300-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு உள்ளிட்ட சட்டங்களை எதிர்த்து அடையாளப் போராட்டமாக நேற்றிரவு இந்தச் சாலை மறியல் நடைபெற்றது.