ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா மருத்துவமனை கட்டடத்தின் மேலிருந்து குதித்து மெக்கானிக் தற்கொலை - கரோனா வார்டில் தற்கொலை

மதுரை கரோனா சிறப்பு மருத்துவமனையின் மாடியிலிருந்து மெக்கானிக் ஒருவர் குதித்து தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

madurai district latest news மதுரை மாவட்டச் செய்திகள் கரோனா வார்டில் தற்கொலை மதுரை கரோனா வார்டில் நோயாளி தற்கொலை
மதுரை கரோனா வார்டில் மெக்கானிக் தற்கொலை
author img

By

Published : Oct 28, 2020, 7:08 PM IST

மதுரை: அண்ணா பேருந்து நிலையம் அருகே கரோனா சிறப்பு மருத்துவமனை இயங்கிவருகிறது. தமிழ்நாடு அரசின் பல்நோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனையாக இருந்த இவ்வளாகம் கரோனா தொற்றுக்குப் பிறகு கரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது.

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த கரோனா நோயாளிகள் இங்கே சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மதுரை பி.பி. குளத்தைச் சேர்ந்த மனோகரன் (53) என்பவர் கரோனா தொற்று அறிகுறி காரணமாக இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், மருத்துவமனையின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து மனோகரன் புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

மனோகரன் இருசக்கர வாகனங்களைப் பழுதுபார்க்கும் தொழில் செய்துவந்தார். மதுப்பழக்கம் இருந்ததால் அது தொடர்பாக மருத்துவரிடம் சிகிச்சைப் பெற்றுவந்துள்ளார்.

இவருக்கு கடன் தொல்லை இருந்துள்ளது. நேற்று இரவு பணம் கேட்டு நெருக்கடி கொடுக்கப்பட்டது தொடர்பாக மனைவி கூறியுள்ளார். இரவு முழுவதும் தூங்காமல் வார்டில் சுற்றித் திரிந்ததாகச் செவிலியர் கூறியுள்ளனர்.

தற்கொலை செய்துகொண்ட மனோகரனுக்கு கரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை முதல்வர் ஜெ. சங்குமணி தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும்படிங்க:பெண்கள் குறைந்தபட்ச திருமண வயது உயர்வு - வழக்கறிஞர்கள், மருத்துவர்களின் அலசல் பார்வை!

ABOUT THE AUTHOR

...view details