தமிழ்நாடு

tamil nadu

சமய மாநாடு சென்றுவந்த திருமங்கலத்தைச் சேர்ந்தவருக்கு கரோனா: 3 வார்டுகள் அடைப்பு

By

Published : Apr 15, 2020, 3:38 PM IST

மதுரை: சமய மாநாடு சென்றுவந்த திருமங்கலத்தைச் சேர்ந்தவருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் வசித்த பகுதி உள்ளிட்ட மூன்று வார்டுகள் முழுவதும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அடைக்கப்பட்டுள்ளன.

Thirumangalam
Thirumangalam

கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற சமய மாநாட்டில் கலந்துகொண்ட மதுரை திருமங்கலத்தில் உள்ள ரோஜாதோட்டம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதைத்தொடர்ந்து திருமங்கலம் நகராட்சிக்குள்பட்ட 13, 14, 15 ஆகிய மூன்று வார்டுகளையும் மூடி சீல்வைக்க மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதன்படி அனைத்து பாதைகளிலும் நகராட்சி ஊழியர்கள் தடுப்புகள் அமைத்தனர்.

தொடர்ந்து அப்பகுதியில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து சுகாதாரப் பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அப்பகுதி மக்கள் எக்காரணம் கொண்டும் வெளியில் வரவும், வெளியாள்கள் உள்ளே செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சமய மாநாடு சென்றுவந்த திருமங்கலத்தைச் சேர்ந்தவருக்கு கரோனா

அப்பகுதி மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வழங்குவதற்கும் நகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதி முழுவதும் குளோரின் தூள் தூவப்பட்டு முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details