மதுரை கீழ வைத்தியநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, தாய் தந்தை இல்லாத காரணத்தால் தன்னுடைய தாத்தா வீட்டில் வசித்துவந்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க சுந்தரம் என்ற முதியவர் சிறுமிக்கு அடிக்கடி உணவு பண்டங்கள் வாங்கிக் கொடுத்து வீட்டுக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே சிறுமியை அரசு விடுதியில் சேர்ப்பதற்காக அவருடைய தாத்தா அழைத்துச் சென்றபோது அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது மருத்துவ அறிக்கையில் சிறுமி பலமுறை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்தது.