மதுரை: பேரையூர் அருகே உள்ள கூவல்புரத்தைச் சேர்ந்தவர் பவுன்ராஜ் (54). இவர் மீது 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2018ஆம் ஆண்டு திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவானது.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் (POCSO) அடிப்படையில் மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம், பவுன்ராஜுக்கு ஆயுள் தண்டனையும் ரூபாய் 5,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.