தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான மதுரையில் பிற நகரங்களைப் போலவே கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்றால் மதுரையைச் சேர்ந்த ஒருவர் கூட இன்று பாதிக்கப்படவில்லை என அம்மாவட்ட ஆட்சியர் வினய் அறிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் 37 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதுவரை கரோனா தொற்றால் 79 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 40 பேர் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.