தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 21, 2020, 11:49 AM IST

ETV Bharat / state

மகாராஷ்டிராவைச் சேர்ந்த 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி

மதுரை: மகாராஷ்டிராவைச் சேர்ந்த 9 பேர் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

corona
corona

மதுரையில் அரசு இராசாசி மருத்துவமனை பல்நோக்கு சிகிச்சை மைய வளாகத்தில் இயங்கிவரும் கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மதுரை மாநகர், மாவட்டம், அருகிலுள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நபர்களும் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில் முன்கள சுகாதாரப் பணியாளர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தானியங்கி ரோபோ அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டு அதன் மூலமாக நோயாளிகளுக்கு தேவையான மருந்து, உணவு வழங்கப்பட்டு வருகின்றன.

இதுவரை 163 பேர் சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில் நேற்று (மே 20) மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 9 பேர் புதிதாக கரோனா வைரஸ் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டனர். இதுவரை 108 பேர் முழு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனின்றி இதுவரை இருவர் மரணமடைந்துள்ளனர். தற்போது 62 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க: காவல் ஆணையர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு உருவாக்கிய நபருக்கு வலைவீச்சு

ABOUT THE AUTHOR

...view details