தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 24, 2019, 5:54 PM IST

ETV Bharat / state

நீட் தேர்வு விவகாரம்: சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்திட்ட உதித்சூர்யா!

மதுரை: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் பிணையி விடுவிக்கப்பட்ட மாணவன் உதித்சூர்யா சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று கையெழுத்திட்டார்.

Uditsuriya

தேனி மருத்துவக் கல்லூரியில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவப் படிப்பில் சேர்ந்த உதித்சூர்யா, அதற்கு உடந்தையாக செயல்பட்ட அவரது தந்தை மருத்துவர் வெங்கடேஷ் ஆகிய இருவரையும் மோசடி குற்றத்திற்காக தேனி சிபிசிஐடி காவல துறையினர் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து, அவர்கள் இருவரும் பிணை கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். மதுரை சிபிசிஐடி அலுவலகத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கடந்த வாரம் உதித்சூர்யாவிற்கு மட்டும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிணை வழங்கி உத்தரவிட்டது.

சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்து போடவந்த உதித்சூர்யா

இந்நிலையில், நேற்று மாலை மதுரை மத்திய சிறையிலிருந்து மாணவன் விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, முதல் நாளான இன்று மதுரையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு உதித்சூர்யா வந்து கையெழுத்திட்டுச் சென்றார்.

இதையும் படிங்க: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details