மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலையைச் சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் வாழ்ந்துவருகின்றன. குறிப்பாக அப்பகுதிகளில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், பிள்ளையார் கோயில், தர்ஹா உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகள் நடமாட்டம் அதிகம் என்பதால் அங்கு வருகின்றவர்கள் குரங்குகளுக்கு வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்டவற்றை உணவாக வழங்கி வந்தனர்.
தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மக்கள் வருகையின்றி குரங்குகள் உணவிற்காக தவித்துவந்தன. இந்த நிலையில் கடந்த சில நாள்களாக அப்பகுதியில் குரங்குகள் தொடர்ந்து உயிரிழப்பதாக அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். அதனால் குரங்குகளின் உணவுக்காக திருப்பரங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர், தன்னார்வலர்களுடன் இணைந்து ஏற்பாடு செய்தார்.
அப்படி உணவிற்கு ஏற்பாடு செய்தும் மேலும் இரண்டு குரங்குகள் உயிரிழந்தன. அதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர், இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.