தமிழ்நாடு

tamil nadu

'சசிகலா விடுதலையாவது இச்சூழலில் முக்கியமானது அல்ல!'

By

Published : Sep 11, 2020, 2:30 PM IST

மதுரை: சசிகலா வெளியே வருவது இந்தக் காலகட்டத்தில் முக்கியமான செய்தி அல்ல என்று சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன்செல்லப்பா தெரிவித்தார்.

rajan chellappa
rajan chellappa

மதுரை திருப்பரங்குன்றத்தில் 300-க்கும் மேற்பட்ட நலிவடைந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச அரிசி, காய்கறித் தொகுப்பினை மதுரை வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நீண்ட நெடிய நாள்களாக வேலையற்று இருந்த 300-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இத்தகைய உதவி செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன். மக்களுடைய நலத்திட்டங்களைப் பூர்த்திசெய்வதிலேயே அதிமுக முழு முயற்சியில் ஈடுபடுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், சசிகலா விடுதலை குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, சசிகலா வெளியே வருவது இந்தக் காலகட்டத்தில் ஒரு முக்கியமான செய்தியல்ல என ராஜன் செல்லப்பா பதிலளித்தார்.

இதையும் படிங்க:வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஒதுக்கீட்டில் முறைகேடு! - பதிலளிக்க முடியாமல் அலுவலர்கள் ஓட்டம்!

ABOUT THE AUTHOR

...view details