மதுரை மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான தனியார் காப்பகம் இயங்கிவருகிறது. ஆதரவற்ற முதியோர்களும் இங்கே பராமரிக்கப்பட்டுவருகின்றனர். இந்தக் காப்பகத்தில் தங்கியுள்ள திருமணமாகாத 45 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் திடீரென வயிற்றுவலியால் அவதிப்பட்டுள்ளார்.
இதையடுத்து காப்பகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அந்தப் பெண்ணை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.அவரைப் பரிசோதித்த மருத்துவர், அப்பெண் ஒன்பது மாதம் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் சுப்ரமணியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.