மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டகுடி விளக்கில் அப்பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இத்தாக்குதலின்போது ராமச்சந்திரனுடன் இருந்த அவரது அண்ணன் மகனான திவாகரும் படுகாயமடைந்தார். தற்போது திவாகர் மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் ரகுபதி ராஜா தலைமையிலான காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.